tamilnadu

img

ஆந்திர காவல்துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை

ஆந்திராவில் பணியாற்றும் காவல்துறையினருக்கு வாரம் ஒருநாள் விடுமுறை வழங்க அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்த அறிக்கையில், ‘புதிய அறிவிப்பின்படி ஆந்திர காவல்துறையைச் சேர்ந்த தலைமை காவலர்கள், துணை காவலர்கள், கான்ஸ்டெபில்கள், காவலர்கள் என அனைவருக்கும் வார விடுமுறை அளிக்கப்படும். இதன் மூலம் 67,804 பேர் பயன்பெற முடியும். இந்த திட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும்’ என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து பேட்டியளித்த அம்மாநில டிஜிபி, காவல் துறையில் உள்ளவர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என முதல்வர் முடிவு செய்தார். இதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு கமிட்டியின் மூலம் மொத்தம் 19 மாடல் விடுமுறை முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் அந்தந்த பகுதியில் உள்ள யூனிட் அதிகாரிகள் ஏதாவது ஒரு மாடலை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். யூனிட் அதிகாரிகள் வழங்கும் கருத்துகளுக்கு ஏற்ப சில நாட்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். தலைமை காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை விடுமுறை வழங்கப்பட உள்ளது. இந்த வார விடுமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என்று தெரிவித்தார்.